ஏறாவூர் அல் ஹிரா பாலர் பாடசாலையின் விடுகை விழா.

அல் -ஹிரா பாலர் பாடசாலையின் விடுகை விழாவும் பரிசளிப்பு நிகழ்வும்…

(உமர் அறபாத் -ஏறாவூர்)

ஏறாவூர் மிச்நகர் அல் ஹிரா பாலர் பாடசாலையின் விடுகை விழாவும் பரிசளிப்பு நிகழ்வும் இன்று சனிக்கிழமை பாலர் பாடசாலையின் அதிபர் ஓய்வுபெற்ற கோட்டக்கல்வி அதிகாரி SA.றசாக் தலைமையில் மிச்நகர் இல்மா வித்தியாலய பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது .

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.நழீம் கலந்து சிறப்பித்தார்.

கௌரவ அதிதியாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் முன்பள்ளிக்கான ஓய்வுபெற்ற உதவிக்கல்வி பணிப்பாளர் MH.நஸீர் கலந்து கொண்டிருந்தார் .

மேலும் இந்நிகழ்வில் மட்/ இல்மா வித்தியாலய அதிபர் HM.முஜாஹிர் ,ஓய்வுபெற்ற சிரேஷ்ட ஆய்வுகூட உத்தியோகத்தர் MI.இஸ்மாயில்,மிச்நகர் கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் MZ.றம்சின்,பிரதேச நலன்விரும்பிகள்,மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர் .

பாலர் பாடசாலை மாணவ மாணவிகளின் கலை நிகழ்வுகள் மேடையில் அரங்கேற்றப்பட்டதுடன் நிகழ்வின் பிரதம அதிதி கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.நழீம் மாணவ மாணவிகளுக்கு பரிசில்களையும் வழங்கி வைத்தார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top