ஏறாவூர் தாருஸ்ஸலாம் ஏற்பாட்டில் கௌரவிப்பு நிகழ்வு.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஏறாவூர் தாருஸ்ஸலாம் கிளையின் ஏற்பாட்டில் பாராளுமன்றத்திற்கு தெரிவான மட்டக்களப்பு மாவட்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். நழீம் அவர்களை கௌரவிக்கும் நிகழ்வு ஏறாவூர் நகரசபையின் முன்னாள் உறுப்பினரும் இமாம் ஹஸ்ஸாலி பவுண்டேஷன் அமைப்பின் தலைவருமான ஏ.ஆர். பிரௌஸ் தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை தாருஸ்ஸலாம் காரியாலயத்தில் இடம் பெற்றது இந்நிகழ்வில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், வட்டார வேட்பாளர்கள், முன்னாள் உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள், கட்சியின் மூத்த போராளிகள், ஆதரவாளர்கள், உலமாக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கௌரவ நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ள எம்.எஸ். நழீம் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் துஆ பிரார்த்தனை நிகழ்வும் இதன்போது இடம்பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top