ஓட்டமாவடி பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.எம்.எஸ். ஹாறூன் ஸஹ்வியின் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வுகளின் போது பிரதம அதிதியாக ICST பல்கலைக்கழகத்தின் ஸ்தாபகரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டதுடன் கெளரவ அதிதியாக கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி திணைக்கள ஆணையாளர் பி. தனேஸ்வரனும் மேலும் திணைக்களத்தின் அதிகாரிகள் கூட்டுறவு சங்கத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள், ஊர் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
காரியாலயம் திறந்து வைக்கப்பட்டதுடன்
அதனைத் தொடர்ந்து மட்/ ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முன்பள்ளி மாணவர் வெளியேற்று வைபத்திலும் அதிதிகள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
#செய்தியாளர்
SMM.முர்ஷித்
ஓட்டமாவடி



