உள்ளூராட்சி ஆணையாளர் அஸ்மி இன்று ஏறாவூர் நகர சபைக்கு திடீர் விஜயம்.
கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி இன்று வியாழக்கிழமை பிற்பகல் ஏறாவூர் நகர சபைக்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டார்.
இதன் போது நகர சபை வளாகத்தைப் பார்வையிட்ட அவர் உடனடியாக உத்தியோகத்தர்களுக்கான கூட்டமொன்றையும் நடாத்தினார்.
நகர சபையின் நிருவாகம் மற்றும் நிதி நடவடிக்கைகள் தொடர்பாக உத்தியோகத்தர்களுக்கு
விசேட ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகளை வழங்கிய அவர் அரசாங்கத்தின்
“கிளீன் சிறீ லங்கா” சிறப்பு நிகழ்ச்சித் திட்டத்திற்கு உள்ளூராட்சி மன்றங்களினால் வழங்கப் படவேண்டிய பங்களிப்பு தொடர்பாகவும் விரிவாக விளக்கமளித்தார்.
தலைமையக உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ந. ஐங்கரன், நகர சபை செயலாளர் எம்.எச்.எம். ஹமீம், கணக்காளர் ஆர்.எப். புஷ்ரா உட்பட சபை உத்தியோகத்தர்கள் கூட்டத்தின் போது பிரசன்னமாகியிருந்தனர்.
MSM.றசீன்
(செய்தியாளர்)





