கபே அமைப்பின் ஏற்பாட்டில் பெண்களை வலுவூட்டும் செயற்திட்டம் கிழக்கு மாகாணத்தில் முன்னெடுப்பு.
#செய்தியாளர்
உமர் அறபாத்
சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் “கபே” அமைப்பின் ஏற்பாட்டில் டிஜிட்டல் ஆரோக்கியம் மற்றும் ஊடக விளங்கறிவு எனும் தொனிப்பொருளில் மூன்று நாள் வதிவிட பயிற்சித் திட்டம் கபே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் அஹமட் மனாஸ் மக்கீன் தலைமையில் புதன்கிழமை அன்று மட்டக்களப்பு கல்லடி தனியார் ஹோட்டலில் இடம்பெற்றது .
இலங்கையில் நான்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்படும் இச்செயற்திட்டம் மூன்று மாகாணங்களில் நிறைவு பெற்று தற்போது கிழக்கு மாகாணத்தில் நடைபெற்று வருகின்றது.
இச்செயற்திட்டத்தின் மூலம் பெண்களை வலுப்படுத்துவதே பிரதான நோக்கம் என கபே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் மனாஸ் மக்கீன் தெரிவித்தார் .
இப்பயிற்சி திட்டத்தின் வளவாளர்களாக நிகழ்ச்சி திட்ட பிரதான ஆலோசகர்களில் ஒருவரான கலாநிதி எம்.சி.றஸ்மின்
முன்னைய நாள் செய்திப்பணிப்பாளர் ஜூனைத் எம் ஹாரிஸ், கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னையநாள் வருகைதரு விரிவுரையாளர் செல்வி .அகல்யா ஆகியோர் கலந்து கொண்டோர்களுக்கு தெளிவுரைகளை வழங்கினர் .
கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி மூன்று மாவட்டத்தில் இருந்தும் முப்பதுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டிருப்பதுடன் எதிர்வரும் உள்ளூராட்சிமன்ற தேர்தலில் வேட்பாளர்களாக உத்தேசிக்கப்பட்டுள்ள பலர் இச்செயற்திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .



