பொதுமக்கள் பிறப்பு,இறப்பு,திருமண பதிவுச்சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள ஓர் நல்லதோர் சந்தர்ப்பம் .

பொது மக்களுக்கான அறிவித்தல்….

ஏறாவூர் நகர பிரதேச செயலாளரினால் மிச்நகர், மீராகேணி மற்றும் ஐயங்கேணி கிராம உத்தியோகத்தர் பிரிவில் வசிக்கும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பிறப்பு, இறப்பு மற்றும் திருமணப் பதிவுச்சான்றிதழ்களை பெற்றுக் கொள்வதற்காக சிரமத்துடன் நீண்ட தூரம் இருந்து பிரதேச செயலகத்திற்கு வருகை தருவதனாலும் அதனால் ஏற்படும் பயணச்செலவு மற்றும் நேர வீண்விரயம் போன்ற அசௌகரியங்களை நிவர்த்திக்கும் பொருட்டும் தங்கள் பகுதியிலேயே அவைகளை இலகுவாக பெற்றுக் கொள்ளும் வகையில் #மிச்நகர் #RDS கட்டிடத்தில் 2025.05.26 ஆந் திகதி முதல் காலை 09.00மணி தொடக்கம் 12.00 மணி வரை விண்ணப்பித்து பிற்பகல் 03.00 மணிக்குப் பின்னர் பதிவுச்சான்றிதழ்களை பெற்றுக் கொள்ள வசதியேற்படுத்தப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

தகவல்….

பிரதேச செயலாளர்
பிரதேச செயலகம்
ஏறாவூர் நகர்.

Eravur

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top