தேசிய இளைஞர் தினத்தினை முன்னிட்டு பயன்தரும் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு.

தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு இணைப்பு 2025 எனும் செயற்திட்டத்தின் கீழ் பிரதேச செயலக மட்டங்களில் இளைஞர் கழகங்களை அமைத்தல் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட நிகழ்வுளில் ஓர் அங்கமாக பயன்தரும் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு 23/05/2025 இன்று ஏறாவூர் சாதுலி பள்ளிவாயல் வளாகத்தில் ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்தின் இளைஞர் சேவை உத்தியோகத்தர் AW.இர்ஷாத் அலி தலைமையில் இடம்பெற்றது .
பிரதம அதிதிதியாக பிரதேச செயலாளர் SH.முஸம்மில் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நாட்டி வைத்தார் .
மேற்படி நிகழ்வில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்,கிராம அபிவிருத்தி சங்க பிரதிநிதிகள் ,பள்ளிவாயல் நிருவாகத்தினர் என பலரும் பங்கேற்று இருந்தனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top