

உதவும் கரங்கள் அமைப்பின் ஏற்பாட்டில் சிறப்பாக நடைபெற்ற மாபெரும் இரத்த தான முகாம்..
(எம்.பஹ்த் ஜுனைட்)
காத்தான்குடி தள வைத்தியசாலை மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை என்பவற்றில் நிலவும் இரத்த தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு காத்தான்குடி குபா ஜும்ஆப் பள்ளிவாயல் மற்றும் காத்தான்குடி உதவுங் கரங்கள் அமைப்பு என்பன இணைந்து ஏற்பாடு செய்திருந்த மாபெரும் இரத்த தான முகாம் ஞாயிற்றுக்கிழமை(01) உதவும் கரங்கள் அமைப்பின் தலைவர் ஏ.எஸ்.ஏ.ஜவ்ஸகி தலமையில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது.
காத்தான்குடி குபா ஜும்ஆப் பள்ளிவாயலில் இடம்பெற்ற இம்முகாமில் ஆண்கள், பெண்கள் என சுமார் 150 ற்கும் மேற்பட்ட இரத்த கொடையாளர் கலந்து கொண்டு இரத்த தானம் வழங்கி இருந்தனர்.
இந்நிகழ்வில் காத்தான்குடி தள வைத்தியசாலை அதியட்சகர் எம்.எஸ்.எம். ஜாபிர் , காத்தான்குடி இரத்த வங்கி வைதியர் நித்யா, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வைத்தியர் சிவாவேனன், குபா ஜும்மா பள்ளிவாயல் தலைவர், செயலாளர் மற்றும் அதன் உறுப்பினர்கள். காத்தான்குடி இரத்த கொடையாளர்கள் சங்க உறுப்பினர்கள், காத்தான்குடி உதவும் கரங்கள் அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் ஊடகவியலாளர், சமூக செயற்பாட்டாளர்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.