

மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்குழுத் தலைவரின் அலுவலகம் புதிய மாவட்ட செயலகத்தில் திறந்து வைப்பு.
அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் காரியாலயம் இன்றைய தினம் மட்டக்களப்பு திராய்மடுவிலுள்ள புதிய மாவட்ட செயலக கட்டடத்தில் திறந்து வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணப்புக்குழுத் தலைவராக அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டதனைத்தொடர்ந்து இன்று அவரது தலைமையில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இடம்பெற்றது.
அதனைத்தொடர்ந்து, மாவட்ட செயலாளர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களது ஏற்பாட்டில் குறித்த அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுனர் ஜயந்தலால் ரத்னசேகர அவர்கள் மற்றும் அமைச்சரின் உததியோகத்தர்கள், மாவட்ட செயலக உயரதிகாரிகள், உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.