ஏறாவூர் நகரசபையில் பதவியேற்பு.

ஏறாவூர் நகரசபையின் கௌரவ தவிசாளர், கௌரவ பிரதி தவிசாளர், கௌரவ உறுப்பினர்கள் (18) புதன்கிழமை இன்று பதவியேற்றார்கள்.

ஏறாவூர் நகரசபையின் கௌரவ தவிசாளர் அல்ஹாஜ் எம்.எஸ். நழீம், கௌரவ பிரதி தவிசாளர் ஞானசேகரம் கஜேந்திரன், ஏறாவூர் நகரசபையின் உறுப்பினர்களான கௌரவ ஏ.எம் அஸ்மி, கௌரவ ஏ.எம் உவைஸ் அல் ஹபீழ், கௌரவ எஸ்.எம் ஜப்பார், கௌரவ எம்.ஐ.ஏ நாஸர், கௌரவ சுப்பிரமணியம் ரகுபரன், கௌரவ அசனார் சுபைதா உம்மா, ஆகியோர் ஏறாவூர் நகரசபையின் செயலாளர் எம்.எச்.எம். ஹமீம் அவர்களின் முன்னிலையில் கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார்கள்.

இந்நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் இரா துரைரெட்ணம், ஏறாவூர் பற்று பிரதேச சபையின் கௌரவ பிரதி தவிசாளர் எஸ். சர்வாணந்தம், கௌரவ உறுப்பினர் எம்.எஸ்.எம். ஜௌபர், உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top