ரிதிதென்ன இக்ரஃவிலிருந்து மாகாண மட்டம் செல்லும் இரு மாணவிகள்.
வலய மட்ட விளையாட்டுப்போட்டியில் 16 வயதுப்பிரிவு உயரம் பாய்தலில் ரிதிதென்ன இக்ரஃ வித்தியாலய மாணவிகளான எம்.எஃப்.மன்ஸிலா முதலாமிடத்தையும் ஏ.எஃப்.அஸ்னா இரண்டாமிடத்தையும் பெற்று மாகாண மட்டப்போட்டிக்கு தெரிவாகி பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
குறித்த மாணவிகளுக்கும் மாணவிகளுக்கு பயிற்சியளித்த ஆசிரியர்களான ஆர்.ஏ.எம்.பாஷித், ஏ.எல்.எம்.றிஸ்வாஹிதீன், மாணவிகளை போட்டி நடைபெற்ற ஏறாவூர் அஹமட் பரீட் விளையாட்டு மைதானத்திற்கு அழைத்துச்சென்ற ஆசிரியர் ஏ.எஃப்.றிபாஸ் ஆகியோருக்கும் பாடசாலை அதிபர் எம்.எஸ்.எம்.றிஸ்மின் மனப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றார்.