மீண்டும் வரலாற்றுச் சாதனையை பதிவு செய்தது நிந்தவூர் அல்-அஷ்றக் கபடி அணி.
மீண்டும் வரலாற்றுச்சாதனை படைத்தநிந்தவூர் அல்-அஷ்றக் கபடி அணி. (எம்.எஸ்.எம்.ஸாகிர்) கல்வியமைச்சுடன் இணைந்து இலங்கை பாடசாலை கபடி சங்கம் நடாத்திய 2026ம் ஆண்டுக்குரிய தேசிய மட்ட கபடிப்போட்டிகள் கம்பளை வெலம்பொட எக்ஸிலியன் உட்புற விளையாட்டரங்கத்தில் கடந்த 07, 08, 09ம் திகதிகளில் நடைபெற்றன. இப்போட்டிகளில் நிந்தவூர் அல்-அஷ்றக் தேசிய பாடசாலையின் 14, 16, 18 ஆகிய வயதுப்பிரிவு கபடி அணிகள் பங்கு கொண்டு மூன்று அணிகளுமே வெற்றிவாகைசூடி பாடசாலைக்கு தேசிய ரீதியில் பெருமை தேடிக்கொடுத்துள்ளனர். இதில் 18 வயதுக்குட்பட்ட…
