போர் நிறுத்தத்துக்கு ஈரான் 3 முக்கிய நிபந்தனைகள் – சமாதான பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக அறிவிப்பு
ஈரானுடனான மோதலை முடிவுக்கு கொண்டு வர மூன்று முக்கிய நிபந்தனைகளை ஈரான் முன்வைத்துள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் தெரிவித்துள்ளார். சமீபத்தில் இடம்பெற்ற உரையொன்றில் அவர் கூறுகையில், ஈரானின் அடிப்படை உரிமைகள் மற்றும் இறையாண்மை மதிக்கப்பட வேண்டும் என்பதையும், எதிர்காலத்தில் ஈரானை குறிவைத்து எந்தவிதமான தாக்குதலும் நடைபெறாத வகையில் பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார். மேலும், போர் காரணமாக நாட்டிற்கு ஏற்பட்ட சேதங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்….
