ஊடக அறிக்கையிடல் ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து கலந்துரையாடல் .

அறிக்கையிடலில் ஊடகவியலாளா்கள் எதிா்நோக்கும் சவால்கள் தொடா்பில் கலந்துரையாடல்.

(எம்.ஐ.அப்துல் நஸாா்)

காத்தான்குடி மீடியா போரத்தின் ஏற்பாட்டில் அறிக்கையிடலில் ஊடகவியலாளா்கள் எதிா்நோக்கும் சவால்கள் தொடா்பிலான விசேட கலந்துரையாடலொன்று செவ்வாய்க்கிழமை (14) இரவு 8 மணிக்கு அல் பஜர் பள்ளிவாயலில் நடைபெற்றது.

காத்தான்குடி மீடியா போரத்தின் தலைவா் எம்.எஸ்.எம்.நூா்தீன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி கலந்துரையாடலில் வளவாளராக ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும் விடிவெள்ளி பத்திாிகையின் பிரதம ஆசிரியருமான எம்.பீ.எம். பைறூஸ் கலந்து கொண்டு விாிவுரையினை நிகழ்த்தினாா்.

காத்தான்குடியினை தளமாகக் கொண்டு செயற்படும் ஊடகவியலாளா்கள் அறிக்கையிடலின்போது எதிா்நோக்கும் சவால்கள் மற்றும் அதற்கான தீா்வுகள், ஊடக ஒழுக்கநெறியினை பின்பற்ற வேண்டியதன் அவசியம், ஊடகவியலாளா்களுக்கு இடையேயான ஒற்றுமை மற்றும் பரஸ்பர ஒத்துழைப்பு தொடா்பில் எம்.பீ.எம். பைறூஸ் விாிவுரை நிகழ்த்தினாா்.

மேற்படி நிகழ்ச்சியில் காத்தான்குடி மீடியா போரத்தின் பொதுச் செயலாளர் எம்.ஐ.அப்துல் நஸாா், பொருளாளா் பஸால் ஜிப்ரி, உப செயலாளர் ஏ.எல்.அதீப் அஹமட், கலை மற்றும் இலக்கிய பிாிவின் பொறுப்பாளா் எம்.ரீ.எம். யூனுஸ், தகவல் பணிப்பாளர் எம்.எஸ்.சஜித் அஹமட், ஊடக இணைப்பாளர் ஜே.எம்.பஹத்,
போரத்தின் நிருவாக சபை உறுப்பினர்களான மௌலவி என்.எம்.எம்.நௌபர் (பலாஹி), எம்.என்.எம்.றுஸ்த் உட்பட காத்தான்குடியை தளமாகக் கொண்டு செயற்படும் ஊடகவியலாளர் பலரும் கலந்து கொண்டனா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top