fmfahath.dev

ஏறாவூர் நகரசபை உத்தியோகத்தர்கள் நலன்புரி சங்கத்தின் வருடாந்த ஒன்றுகூடல் இன்று இடம்பெற்றது .

ஏறாவூர் நகரசபை உத்தியோகத்தர்கள் நலன்புரி சங்கத்தின் வருடாந்த ஒன்று கூடல் இன்று (21) சனிக்கிழமை கரடியனாறு விவசாயப் பயிற்சி நிலையத்தில் நடை பெற்றது எம்.எஸ்.எம். றசீன் நலன்புரி சங்கத்தின் தலைவரும் நகரசபையின் செயலாளருமாகிய ஜனாப் எம்.எச்.எம் ஹமீம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நகரசபையில் கடமையாற்றி இடமாற்றம் மற்றும் ஓய்வு பெற்றுச் சென்ற உத்தியோகத்தர்கள் கௌரவிக்கப்பட்டனர். கல்வி, விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகளில் தேசிய மட்ட பெறுபேறுகளைப் பெற்று சாதனைகளை நிலைநாட்டிய சபை உத்தியோகத்தர்களின் பிள்ளைகளும் இவ்வைபவத்தில் பணப்பரிசு வழங்கி…

Read More

ஏறாவூர் சிறுவர் பராமரிப்பு நிலையத்திற்கு இரண்டுமாடி கட்டிடம்.

ஏறாவூர் சிறுவர் பராமரிப்பு நிலையத்திற்கு இரண்டு மாடி கட்டிடம். (ஏறாவூர் செய்தியாளர்ஐ.எம். அம்ஜத்) ஏறாவூர் மீராகேனி பிரதேசத்தில் இயங்கி வரும் சிறுவர் இல்லத்திற்கு இரண்டு மாடி கட்டிட தொகுதிக்கான அடிக்கல் நடும் நிகழ்வு சிரேஷ்ட சமூக சேவை உத்தியோகத்தர் ஏ.எம்.எம். அலியார் தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதமர் அதிதியாக ஓட்டமாவடி கோரளைப்பற்று மேற்கு, உதவி பிரதேச செயலாளர் எம்.ஆர். சியாஹூல் ஹக் கலந்து சிறப்பித்ததுடன் கௌரவ அதிதிகளாக ஏறாவூர் சுகாதார வைத்திய பணிமனையின்…

Read More

போதைப் பொருளுடன் ஒருவர் கைது.

நிந்தவூரில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது! சம்மாந்துறை தில்சாத் பர்வீஸ் அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிந்தவூர் 23 பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் இன்று வெள்ளிக்கிழமை (20) அதிகாலை 01.30 மணியளவில் சம்மாந்துறை விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர். சம்மாந்துறை விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போதே சந்தேகத்திற்கிடமாக நடமாடிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். நிந்தவூர் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய நபரே…

Read More

முழக்கம் அப்துல் மஜீத் காலமானார் .

அப்துல் மஜீட் அவர்களுடைய இழப்பு கட்சிக்கும் முஸ்லிம் சமூகத்திற்கும் பேரிழப்பாகும். அனுதாப செய்தியில் முஸ்லிம் காங்கிரஸ் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்எம்.எஸ். நழீம். ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தவிசாளரும் சிரேஷ்ட பிரதித் தலைவரும் இணைந்த வட கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் மாமனிதருமான முழக்கம் அப்துல் மஜீட் அவர்களுடைய மரணச்செய்தி கேட்டு மிகுந்த கவலை அடைகின்றேன். அவரின் மரணமானது கட்சிக்கு பாரிய ஓர் பேரிழப்பாகும்.ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வளர்ச்சியிலே மறைந்த மாபெரும் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப்…

Read More

நாடு திரும்பினார் ஜனாதிபதி .

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மற்றும் அவரது குழுவினர் இந்தியாவுக்கான மூன்று நாள் விஜயத்தை நிறைவு செய்து நேற்றிரவு(17) நாடு திரும்பியுள்ளனர். PresidentSL #anurakumardissanayake #returned #indian #etnnews

Read More

ஏறாவூரில் அதிகாலை நேரம் விபத்து.

ஏறாவூரில் இன்று அதிகாலை நேரம் ஹாட்வெயார் கடைக்குள் சொகுசு கார் நுழைந்து விபத்து சம்பவம் .மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர் . மேலதிக விபரம் ….. ஏறாவூரில் இன்று அதிகாலை நேரம் ஹாட்வெயார் கடைக்குள் சொகுசு கார் நுழைந்து விபத்து சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது. பண்டாரகமுவையில் இருந்து கல்முனை நோக்கி பயணித்தே காரே தூக்க களைப்பினால் கட்டுப்பாட்டை இழந்து ஹாட்வெயார் கடைக்குள் புகுந்துள்ளது. உயிர் சேதம் மற்றும் படுகாயம் எதுவும் இடம்பெறவில்லை.எனினும் கடைக்குள்…

Read More

இளைஞர் பயிற்சி நிலையம் திறப்பு .

ஓட்டமாவடியில் இளைஞர் பயிற்சி நிலையம் திறப்பு விழா. எஸ்.எம்.எம்.முர்ஷித் இளைஞர்களின் தொழில் விருத்தியை மேம்படுத்தும் நோக்கில் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் வழிகாட்டலில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டாவது இளைஞர் பயிற்சி நிலையம் ஓட்டமாவடியில் இன்று (திங்கள்கிழமை) திறந்து வைக்கப்பட்டது. இளைஞர் சேவைகள் அதிகாரியும் பயிற்சி நிலையத்தின் பொறுப்பதிகாரியுமான ஏ.எம்.ஹனீபா தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி சி.தர்ஸன…

Read More

ஜனாதிபதிக்கு சம்பிரதாய வரவேற்பு.

ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதிக்கு சம்பிரதாய வரவேற்பு. ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவை இன்று காலை ராஷ்டிரபதி பவனில் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் சம்பிரதாயபூர்வமாக வரவேற்றனர்.

Read More
Back To Top