Umar Arafath

காத்தான்குடியில் உள்ளக விளையாட்டு அரங்கு அமைப்பு தொடர்பில் விஜயம்.

நவீன உள்ளக விளையாட்டரங்கு : ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஹிஸ்புல்லாஹ் எம்பி ஆய்வு காத்தான்குடி ஆற்றங்கரைப்பகுதியில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தித்திட்டங்களை பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் அவர்கள் இன்று (13) நேரில் சென்று பார்வையிட்டார். இதன்போது, நவீன வசதிகளுடன் கூடிய உள்ளக விளையாட்டரங்கு (Indoor Stadium) அமைக்கும் திட்டம் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது. மேலும், இப்பகுதியின் முழுமையான முன்னேற்றத்தை நோக்கமாகக்கொண்ட ஏனைய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் ஆராய்யப்பட்டது. இந்நிகழ்வில், காத்தான்குடி நகர சபை உறுப்பினர் ஈ.எம் றுஸ்வின்…

Read More

கல்முனை இஸ்லாமபாத் வித்தியாலயத்தில் மின்சார சேமிப்பு வார நிகழ்வு.

கல்முனை இஸ்லாமபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் ‘சுரகிமு லங்கா’ மின்சார சேமிப்பு வார நிகழ்வு..! (ஏ.எஸ்.எம்.அர்ஹம்) ‘சுரகிமு லங்கா’ (Surakimu Lanka) தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு நிகழ்வு கல்முனை இஸ்லாமபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இன்று (10) சிறப்பாக நடைபெற்றது. ​பாடசாலை அதிபர் திரு. ஏ.ஜீ.எம். றிசாத் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த விசேட காலை ஆராதனையில், ‘க்ளீன் சிறீலங்கா’ (Clean Sri Lanka) வேலைத்திட்டத்தின் இணைப்பாளர் திரு. எச்.எம்….

Read More

திஹாரிய தாருஸலாம் பாடசாலையின் சின்னம் சூட்டும் விழா.

திஹாரிய தாருஸலாம் ஆரம்பப் பாடசாலையில் 2026 ஆம் ஆண்டிற்கான மாணவத் தலைவர்கள் மற்றும் சுகாதார மேம்பாட்டு குழு உறுப்பினர்களுக்கான பதவி ஏற்பு வைபவமும் சின்னம் சூட்டும் நிகழ்வும் (09.04.2026) வியாழக்கிழமை அன்று தாருஸலாம் ஆரம்பப் பாடசாலையின் கேட்போர் கூடத்தில் கல்லூரி அதிபர் எம்.ஐ. அஸ்மின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கம்பஹா களனி வலய தமிழ் மொழிப் பிரிவு பாடசாலைகளின் பிரதிக் கல்வி பணிப்பாளர் எம்.டி.எம். தௌசீர் கலந்து சிறப்பித்தார். மேலும் கௌரவ அதிதியாக ஆசிரியர்…

Read More

சம்மாந்துறை நீச்சல் தடாக சீரமைப்பு பணிகள் விரைவில்.

நீச்சலை ஊக்குவிக்க வாய்ப்பு நீண்டகாலமாக பழுதடைந்த நீச்சல் தடாகம் : விரைவில் சீரமைப்புப்பணிகள் ஆரம்பம் (நூருல் ஹுதா உமர்) சம்மாந்துறை விளையாட்டுத்தொகுதியில் அமைந்துள்ள நீச்சல் தடாகம் நீண்டகாலமாக பழுதடைந்த நிலையில் காணப்பட்டு வந்த நிலையில், அதனை விரைவாக சீரமைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்களிடையே நீண்டநாளாக நிலவி வந்த கவலைகளை முன்னிட்டு, சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர்கள் குழு கடந்த 06.04.2026 அன்று ஜனாதிபதி விளையாட்டு கட்டிடத் தொகுதிக்கு நேரில் சென்று நிலைமைகளை…

Read More

நிந்தவூர் அல்/மஸ்ஹர் மகளிர் கல்லூரி மாணவர்கள் வரலாற்று சாதனை.

பாராட்டும் கௌரவிப்பும்: நிந்தவூர் அல்-மஸ்ஹர் மகளிர் பாடசாலை வரலாற்றுச் சாதனை நூருல் ஹுதா உமர் நிந்தவூர் கமு/கமு/அல்-மஸ்ஹர் பெண்கள் உயர்தர பாடசாலை, 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் 51 மாணவிகள் பல்கலைக்கழக அனுமதியைப் பெறும் வாய்ப்பை அடைந்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. நிந்தவூர் கல்விக் கோட்டத்தில் அதிகளவான பல்கலைக்கழக அனுமதிகளைப் பெற்ற பாடசாலையாக இப்பாடசாலை முன்னிலை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த சாதனையை முன்னிட்டு மாணவிகளை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு…

Read More

தேசிய  ஷோடோகான் கராத்தே போட்டியில் நிந்தவூர் அணி வெற்றி.

தேசிய ஷோடோகான் கராத்தே சுற்றுப்போட்டியில் வெற்றி பெற்ற Team Bruce (SKMS) வீரர்கள் கடந்த 04.04.2026ம் திகதி கொழும்பில் இடம்பெற்ற “15வது Shotokan Karate National Championship 2025” போட்டியில் நிந்தவூர் Team Bruce மாணவர்கள் சாதனை படைத்து 4 தங்கம், 1 வெள்ளி மற்றும் 3 வெண்கலப்பதக்கங்களை வென்று பெருமை சேர்த்துள்ளனர். தேசிய ரீதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்ட இத்தேசியளவிலான போட்டியில் SKMS அமைப்பின் மாணவர்கள் தங்கள் திறமையை நிரூபித்துள்ளனர். இது ஒழுக்கம்,…

Read More

உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்கள் கௌரவிப்பு.

சாதனை படைத்த ரிதிதென்ன இக்ரஹ் வித்தியாலய மாணவர்களுக்கு ஜெயந்தியாய அஹமட் ஹிராஸில் கௌரவிப்பு கடந்த 2025 க.பொ.த உயர்தரப்பரிட்சையில் சித்தியடைந்து வரலாற்றுச்சாதனை நிகழ்த்திய மாணவர்களையும் கற்பித்த ஆசிரியர்களையும் வழிகாட்டிய அதிபரையும் பாராட்டி வரவேற்று கௌரவிப்பு செய்த நிகழ்வானது ஜெயந்தியாய அஹமட் ஹிராஸ் வித்தியாலயத்தில் அதன் முதல்வர் எஸ்.ஐ.முஹாஜிரீன் அவர்களின் தலைமையில் பாடசாலை முன்றலில் இன்று (06) நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம அதிதிகளாக ICST CAMPUS முகாமையாளரும் வாகரைப்பிரதேச சபை உறுப்பினருமான SM தாஹிர், வாகரை பிரதேச சபை…

Read More

நலிவுற்ற மக்களின் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்த அரசாங்கத்தின்  தொடரான நடவடிக்கைகள்  முன்னெடுப்பு.

நெருக்கடிமிக்க சூழலிலும் நலிவுற்ற மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த அரசு தீவிரம் – கந்தசாமி பிரபு எம்பி (எம்.ரீ.எம்.பாரிஸ்) தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சர்வதேச ரீதியில் பிற நாடுகளுடன் வலுவான இராஜதந்திர உறவுகளுடன் செயற்படுவதாகவும் நெருக்கடிமிக்க சூழ்நிலையிலும் சாதாரண நலிவுற்ற மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்கான பல்வேறு வேலைத்திட்டங்கள் அரசாங்கத்தினால் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்தி ஒருங்கினைப்புக்குழுவின் இணைத்தலைவருமான கந்தசாமி பிரபு தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய வீடமைப்பு அதிகார…

Read More

மட்டு செங்கலடி பகுதியில்  யானைகளின்  அட்டகாசத்தால் பொருட்கள் சேதம்.

செங்கலடி பதுளை வீதியில் யானைகளின் அட்டகாசத்தால் வர்த்தக நிலையம் உட்பட பயிர் நிலங்களும் மதில்களும் சேதமாக்கப்பட்டுள்ளன. இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வேளையிலே இச்சம்பவம் பதிவாகியுள்ளது.இச்சம்பவத்தினால் அதிகளவான பெறுமதிமிக்க பொருட்கள் நாசமாகியுள்ளன. யானை அச்சுறுத்தல் மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடரும் வேளை உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தி விரைவாக தீர்வை பெற்றுத்தர வேண்டும் என பொதுமக்கள் இதன்போது கோரிக்கை விடுக்கின்றனர்.

Read More

ஏறாவூர் வாவிக்கரை பூங்காவில் முதியோர் ஓய்வுக்கான கூடாரம் திறந்து வைப்பு.

முதியோர்களுக்கான ஓய்வு வசதிகள் மேம்பாடு – மௌலானா பூங்காவில் கூடாரம் — தவிசாளர் நழீம் அவர்களினால் திறந்து வைப்பு ஏறாவூர் வாவிக்கரை வீதியில் அமைந்துள்ள மௌலானா பூங்காவில், தினமும் மாலை நேரங்களில் முதியோர்கள் ஒன்றுகூடி தங்களது ஓய்வு நேரங்களை மகிழ்ச்சியுடன் கழிப்பது வழக்கமாக இருந்து வந்தது. இந்நிலையில், ஏறாவூர் நகரசபையின் கௌரவ தவிசாளர் அல்ஹாஜ் எம்.எஸ். நழீம் அவர்கள், நகரசபைக்கு சொந்தமான இப்பூங்காவை பார்வையிட வந்தபோது, அங்கு கூடிவந்த முதியோர்களினால் அவர்கள் எதிர்நோக்கும் சிரமங்கள் மற்றும் குறைபாடுகள்…

Read More
Back To Top