மீன்பிடி தொடர்பில் விழிப்புணர்வு செயலமர்வு.

மீன்பிடி தொடர்பில் விழிப்புணர்வு செயலமர்வு. (நூருல் ஹுதா உமர்) மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் (மெசிடோ) ஏற்பாட்டில் கல்முனை பிராந்தியத்தைச்சேர்ந்த மீனவர்களுக்காக இலங்கையின் மீன்பிடித்துறை, மீனவர்களுக்கு நிலவும் சவால்கள் மற்றும் மீன்பிடி தொடர்பான சட்டங்கள் குறித்து விளக்கமளிக்கும் செயலமர்வு இன்று (11) கடற்றொழில், நீரியல்வளங்கள் திணைக்கள அம்பாறை மாவட்ட காரியாலயத்தில் நடைபெற்றது. மீனவர்களின் தொழில் முன்னேற்றத்தையும் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்ட இச்செயலமர்வில், மீன்பிடி நடவடிக்கைகளில் கடைப்பிடிக்க வேண்டிய சட்ட விதிமுறைகள்,…

Read More

மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரஜாசக்தி செயற்திட்டம் தொடர்பான கலந்துரையாடல் .

மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரஜாசக்தி செயற்திட்டம் தொடர்பான கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பிரஜாசக்தி செயற்திட்டம் தொடர்பான கலந்துரையாடல் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்பு குழுத்தலைவருமான கந்தசாமி பிரபு அவர்களின் தலைமையில் மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ் அருள்ராஜ் அவர்களின் ஏற்பாட்டில் புதிய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று (10) இடம் பெற்றது. பிரஜாசக்தி செயற்திட்டத்தின் மூலம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அடையாளம் கண்டு அவற்றை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். இதன்…

Read More

ஓட்டமாவடியில் இன ஐக்கியத்தை கட்டியெழுப்பும் இப்தார் நிகழ்வு.

ஓட்டமாவடியில் இன ஐக்கிய Youth Ling இளைஞர், யுவதிகளின் விஷேட இப்தார் நிகழ்வு. இளைஞர் விவகார அமைச்சின் வழிகாட்டலில் தேசிய, சர்வதேச “யூத் லிங்”(Youth ling) வேலைத்திட்டத்தின்கீழ் நாடு பூராகவும் பல்வேறு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்ட வருகிறது. இதற்கமைவாக மூவின இளைஞர், யுவதிகளையும் ஒன்றிணைத்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இப்தார் விஷேட நிகழ்வு ஓட்டமாவடி தொழிற்பயிற்சி நிலையத்தில்  திங்கட்கிழமை (9) அன்று நடைபெற்றது. இதன்போது பலதரப்பட்ட சமூகங்களுக்கிடையில் இன நல்லிணக்கத்தைக் கட்டியொழுப்புதல், சமயங்களுக்கு இடையிலான வித்தியாசங்களைப்புரிந்து கொண்டு ஒவ்வொருவரினதும் மத…

Read More

இலங்கை போக்குவரத்து சபைக்கு புதிதாக இணைத்து கொள்ளப்பட்டோருக்கு ஜனாதிபதியினால்  நியமனங்கள் வழங்கி வைப்பு.

இலங்கை போக்குவரத்துச் சபையில் புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்ட 199 சாரதிகளுக்கும் மற்றும் 342 நடத்துனர்களுக்குமான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வில் இன்று (10) முற்பகல் அலரி மாளிகையில் இடம்பெற்ற நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்று இருந்தார். இலங்கை போக்குவரத்துச் சபைக்கும் இந்நாட்டு மக்களுக்கும் இடையிலான பிணைப்பை உறுதிப்படுத்தி, ஒரு வலுவான பொதுப் போக்குவரத்துச் சேவையாக இ.போ.சபையை கட்டியெழுப்புவதற்கு இன்று நியமனம் பெற்ற அனைவரும் தமது பொறுப்புக்களைச் சரியாக நிறைவேற்றுவார்கள் என நம்பிக்கை தெரிவித்ததுடன், புதிய நியமனம் பெற்ற அனைவருக்கும் தனது…

Read More

லிட்ரோ எரிவாயுவின் விலை இன்று நள்ளிரவு முதல் உயர்வு.

லிட்ரோ எரிவாயுவின் விலை இன்று நள்ளிரவு (10) முதல் அதிகரிப்பு. 12.5 கிலோ 300 ரூபாவால் அதிகரிப்பு புதிய விலை ரூ.3,990 5 கிலோ 120 ரூபாவால் அதிகரிப்பு புதிய விலை ரூ.1,602 2.3 கிலோ 56 ரூபாவால் அதிகரிப்பு புதிய விலை ரூ.750 ரூபாய் ஆகும்.

Read More

மட்டக்களப்பில் சர்வதேச மகளீர் தின நிகழ்வு.

மட்டக்களப்பில் சர்வதேச மகளீர் தின நிகழ்வு. மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் சர்வதேச மகளீர் தின நிகழ்வானது உதவி மாவட்ட செயலாளர் ஜீ.பிரணவன் தலைமையில் மாவட்ட மகளீர் அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ். அருனாளினி ஏற்பாட்டில்பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் (09) அன்று இடம்பெற்றது. ” பெண்களின் தலைமைத்துவம் செழிப்பான தேசத்தில் பெருமை” எனும் தொனிப்பொருளில்நாடளாவிய ரீதியில் மகளீர் தின நிகழ்வுகள் கொண்டாடப்படுகின்றது. இதனை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலாளர் பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட பெண்…

Read More
Back To Top