ஏறாவூரில் சமூக உற்பத்தி திறனுக்கான மாதிரி கிராமம் அங்குராப்பணம்.
சமூக உற்பத்தி திறனுக்கான மாதிரி கிராமம் அங்குரார்ப்பன நிகழ்வு. ஏறாவூர் பகுதியில் தெரிவு செய்யப்பட்ட றகுமத் நகர் கிராமத்தை ஒரு மாதிரி உற்பத்தி கிராமமாக மேம்படுத்தும் நோக்கோடு 03 பிரதான செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தும் ஆரம்ப நிகழ்வு இன்றைய தினம் (16.03.2026) ஏறாவூர் பிரதேச செயலாளர் SH. முஸம்மில் தலைமையில் இடம்பெற்றது. “தேசத்தை கட்டி எழுப்புகின்ற வளமான கிராமம்” எனும் தொனிப்பொருளில் நாடளாவிய ரீதியில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் வீட்டு உற்பத்தித்திறனை மேம்படுத்துவதன் மூலம் மக்களின் கல்வி,…
