உயர்தர பரீட்சை பெறுபேறுகளை பெற்ற மாணவர்களுக்கான வாழ்த்து செய்தி.
அர்ப்பணிப்பு, உழைப்பு, பொறுமையால் கிடைத்த வெற்றி நேற்றைய தினம் வெளியிடப்பட்ட க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், அனைத்து துறைகளிலும் சிறப்பான சாதனைகளைப்பெற்ற மாணவ மாணவியர் அனைவருக்கும் இதயப்பூர்வமான பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்வதாக கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் என்.எம்.பாஹிர் தெரிவித்துள்ளார். உங்கள் அர்ப்பணிப்பு, உழைப்பு, பொறுமையின் பலனாக இவ்வெற்றியை அடைந்துள்ளீர்கள். அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் வழிகாட்டல், குறிப்பாக, பெற்றோர்களின் அளப்பெறிய தியாகம் உங்கள் வெற்றிக்கு உரமாகும். நீங்கள் காட்டிய முயற்சி மற்றவர்களுக்கு ஒரு…
