ஏறாவூர் பொதுச்சந்தை மக்களின் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.

ஏறாவூர் பொதுச் சந்தை திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.. ஏறாவூர் நகரின் வர்த்தக வளர்ச்சிக்கு புதிய அத்தியாயத்தைத் திறக்கும் வகையில், ஏறாவூர் பொதுச் சந்தை புதிய கட்டிடத்தின் திறப்பு விழா வெள்ளிக்கிழமை  (17) ஏறாவூரில் சிறப்பாகவும் விமர்சையாகவும் நடைபெற்றது. ஏறாவூர் நகரசபை தவிசாளர்  எம்.எஸ். நளீம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்னசேகர அவர்கள் கலந்து கொண்டு கட்டிடத்தை திறந்து வைத்தார். அதேவேளை, கௌரவ அதிதியாக ஸ்ரீலங்கா…

Read More

ஊடக அறிக்கையிடல் ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து கலந்துரையாடல் .

அறிக்கையிடலில் ஊடகவியலாளா்கள் எதிா்நோக்கும் சவால்கள் தொடா்பில் கலந்துரையாடல். (எம்.ஐ.அப்துல் நஸாா்) காத்தான்குடி மீடியா போரத்தின் ஏற்பாட்டில் அறிக்கையிடலில் ஊடகவியலாளா்கள் எதிா்நோக்கும் சவால்கள் தொடா்பிலான விசேட கலந்துரையாடலொன்று செவ்வாய்க்கிழமை (14) இரவு 8 மணிக்கு அல் பஜர் பள்ளிவாயலில் நடைபெற்றது. காத்தான்குடி மீடியா போரத்தின் தலைவா் எம்.எஸ்.எம்.நூா்தீன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி கலந்துரையாடலில் வளவாளராக ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும் விடிவெள்ளி பத்திாிகையின் பிரதம ஆசிரியருமான எம்.பீ.எம். பைறூஸ் கலந்து கொண்டு விாிவுரையினை நிகழ்த்தினாா். காத்தான்குடியினை தளமாகக்…

Read More

டித்வா புயலினால் சேதமடைந்து புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீட்டு திறப்பு விழா நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பு.

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு சுபநேரச் சடங்குகளில் இணைந்துகொண்டு, டித்வா சூறாவளியினால் சேதமடைந்த, அநுராதபுரம் – கல்நேவ பகுதியைச் சேர்ந்த இந்திரஜித் சம்பத் சேனாரத்னவின் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இல்லத்தில் இன்று (14) முற்பகல் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஜனாதிபதி கலந்து கொண்டிருந்தார் . கடந்த நவம்பர் மாதம் ஏற்பட்ட ‘டித்வா’ அனர்த்தத்தினால் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டின் கீழ், ஐந்து மாத காலப்பகுதிக்குள் இந்த வீடு கட்டி முடிக்கப்பட்டுள்ளது. கல்நேவ பிரதேச செயலாளர் பிரிவில் முழுமையாக…

Read More

சிங்கள மற்றும் தமிழ் சித்திரை புத்தாண்டு வாழ்த்துச் செய்தி.

பௌதீக ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் மாற்றம் பெறுவதை அடையாளப்படுத்தும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டானது, இந்நாட்டு மக்களின் பிரதான கலாசார விழாவாகும். பாரம்பரிய சம்பிரதாயங்களைப் பாதுகாத்து, சுபநேரச் சடங்குகளுக்கும் சமயக் கிரியைகளுக்கும் முன்னுரிமை அளித்து, கூட்டாக ஒரே சுபநேரத்தில் சிங்கள தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இந்தப் பண்பாட்டுப் பகிர்வு உலகிற்கு முன்னால் எமது நாட்டின் அடையாளத்தையும், எமது சமூகங்களுக்கு இடையே நிலவும் சமூக-கலாசார பிணைப்பையும் சிறப்பாகப் பிரதிபலிக்கிறது. நாட்டின் எதிர்கால அபிவிருத்திப் பாதையை, இந்த பெறுமதிமிக்க கலாசாரம்…

Read More

ரமலான் வினா விடை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான கௌரவிப்பு.

ரமலான் வினா-விடை வெற்றியாளர்களுக்கு பரிசளிப்பு மற்றும் குடும்ப ஒன்று கூடல் சிறப்பாக நடைபெற்றது (நூருல் ஹுதா உமர்) அல் மீஸான் பௌண்டஷன், ஸ்ரீலங்கா நிறுவனத்தின் அனுசரனையில், சாய்ந்தமருது பிரதேச சமூக அபிவிருத்தி அமைப்பின் ஏற்பாட்டில் அமைப்பின் தலைவர் ஐ. ஜாபீர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற ரமலான் வினா-விடை போட்டியின் வெற்றியாளர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வும், அமைப்பின் உறுப்பினர்கள் குடும்ப ஒன்று கூடலும் இன்று திங்கள்கிழமை(13) ஒலுவில் அஸ்ரப் நகரில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வு மதப்பண்புகளை வளர்த்தெடுத்தல், இளைஞர்களிடையே இஸ்லாமிய…

Read More

வாழைச்சேனை பிறைந்துரைச்சேனை உயர்தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்றவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு.

பிறைந்துரைச்சேனை மண்ணுக்கு பெருமை சேர்த்த மாணவர்கள் கெளரவிப்பு வாழைச்சேனை கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பிறைந்துரைச்சேனையை பிறப்பிடமாகக் கொண்ட 35 மாணவர்கள், பிறைந்துரைச்சேனை கல்வி அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று (13) மட்/மம சாதுலியா வித்தியாலய முன்றலில் கெளரவிப்பு நிகழ்வு விமர்சையாக இடம்பெற்றது. கடந்த 10 ஆண்டுகளாக இப்பிரதேச மாணவர்களின் நலனை முன்னிறுத்தி பல்வேறு பணிகளை மேற்கொண்டு வரும் பிறைந்துரைச்சேனை கல்வி அபிவிருத்தி ஒன்றியம், இம்முறை வெளியான க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களை…

Read More

காத்தான்குடியில் உள்ளக விளையாட்டு அரங்கு அமைப்பு தொடர்பில் விஜயம்.

நவீன உள்ளக விளையாட்டரங்கு : ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஹிஸ்புல்லாஹ் எம்பி ஆய்வு காத்தான்குடி ஆற்றங்கரைப்பகுதியில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தித்திட்டங்களை பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் அவர்கள் இன்று (13) நேரில் சென்று பார்வையிட்டார். இதன்போது, நவீன வசதிகளுடன் கூடிய உள்ளக விளையாட்டரங்கு (Indoor Stadium) அமைக்கும் திட்டம் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது. மேலும், இப்பகுதியின் முழுமையான முன்னேற்றத்தை நோக்கமாகக்கொண்ட ஏனைய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் ஆராய்யப்பட்டது. இந்நிகழ்வில், காத்தான்குடி நகர சபை உறுப்பினர் ஈ.எம் றுஸ்வின்…

Read More

கல்முனை இஸ்லாமபாத் வித்தியாலயத்தில் மின்சார சேமிப்பு வார நிகழ்வு.

கல்முனை இஸ்லாமபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் ‘சுரகிமு லங்கா’ மின்சார சேமிப்பு வார நிகழ்வு..! (ஏ.எஸ்.எம்.அர்ஹம்) ‘சுரகிமு லங்கா’ (Surakimu Lanka) தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு நிகழ்வு கல்முனை இஸ்லாமபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இன்று (10) சிறப்பாக நடைபெற்றது. ​பாடசாலை அதிபர் திரு. ஏ.ஜீ.எம். றிசாத் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த விசேட காலை ஆராதனையில், ‘க்ளீன் சிறீலங்கா’ (Clean Sri Lanka) வேலைத்திட்டத்தின் இணைப்பாளர் திரு. எச்.எம்….

Read More

திஹாரிய தாருஸலாம் பாடசாலையின் சின்னம் சூட்டும் விழா.

திஹாரிய தாருஸலாம் ஆரம்பப் பாடசாலையில் 2026 ஆம் ஆண்டிற்கான மாணவத் தலைவர்கள் மற்றும் சுகாதார மேம்பாட்டு குழு உறுப்பினர்களுக்கான பதவி ஏற்பு வைபவமும் சின்னம் சூட்டும் நிகழ்வும் (09.04.2026) வியாழக்கிழமை அன்று தாருஸலாம் ஆரம்பப் பாடசாலையின் கேட்போர் கூடத்தில் கல்லூரி அதிபர் எம்.ஐ. அஸ்மின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கம்பஹா களனி வலய தமிழ் மொழிப் பிரிவு பாடசாலைகளின் பிரதிக் கல்வி பணிப்பாளர் எம்.டி.எம். தௌசீர் கலந்து சிறப்பித்தார். மேலும் கௌரவ அதிதியாக ஆசிரியர்…

Read More

சம்மாந்துறை நீச்சல் தடாக சீரமைப்பு பணிகள் விரைவில்.

நீச்சலை ஊக்குவிக்க வாய்ப்பு நீண்டகாலமாக பழுதடைந்த நீச்சல் தடாகம் : விரைவில் சீரமைப்புப்பணிகள் ஆரம்பம் (நூருல் ஹுதா உமர்) சம்மாந்துறை விளையாட்டுத்தொகுதியில் அமைந்துள்ள நீச்சல் தடாகம் நீண்டகாலமாக பழுதடைந்த நிலையில் காணப்பட்டு வந்த நிலையில், அதனை விரைவாக சீரமைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்களிடையே நீண்டநாளாக நிலவி வந்த கவலைகளை முன்னிட்டு, சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர்கள் குழு கடந்த 06.04.2026 அன்று ஜனாதிபதி விளையாட்டு கட்டிடத் தொகுதிக்கு நேரில் சென்று நிலைமைகளை…

Read More
Back To Top