ஏறாவூர் பொதுச்சந்தை மக்களின் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.
ஏறாவூர் பொதுச் சந்தை திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.. ஏறாவூர் நகரின் வர்த்தக வளர்ச்சிக்கு புதிய அத்தியாயத்தைத் திறக்கும் வகையில், ஏறாவூர் பொதுச் சந்தை புதிய கட்டிடத்தின் திறப்பு விழா வெள்ளிக்கிழமை (17) ஏறாவூரில் சிறப்பாகவும் விமர்சையாகவும் நடைபெற்றது. ஏறாவூர் நகரசபை தவிசாளர் எம்.எஸ். நளீம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்னசேகர அவர்கள் கலந்து கொண்டு கட்டிடத்தை திறந்து வைத்தார். அதேவேளை, கௌரவ அதிதியாக ஸ்ரீலங்கா…
