நிந்தவூர் அல்/மஸ்ஹர் மகளிர் கல்லூரி மாணவர்கள் வரலாற்று சாதனை.

பாராட்டும் கௌரவிப்பும்: நிந்தவூர் அல்-மஸ்ஹர் மகளிர் பாடசாலை வரலாற்றுச் சாதனை நூருல் ஹுதா உமர் நிந்தவூர் கமு/கமு/அல்-மஸ்ஹர் பெண்கள் உயர்தர பாடசாலை, 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் 51 மாணவிகள் பல்கலைக்கழக அனுமதியைப் பெறும் வாய்ப்பை அடைந்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. நிந்தவூர் கல்விக் கோட்டத்தில் அதிகளவான பல்கலைக்கழக அனுமதிகளைப் பெற்ற பாடசாலையாக இப்பாடசாலை முன்னிலை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த சாதனையை முன்னிட்டு மாணவிகளை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு…

Read More

தேசிய  ஷோடோகான் கராத்தே போட்டியில் நிந்தவூர் அணி வெற்றி.

தேசிய ஷோடோகான் கராத்தே சுற்றுப்போட்டியில் வெற்றி பெற்ற Team Bruce (SKMS) வீரர்கள் கடந்த 04.04.2026ம் திகதி கொழும்பில் இடம்பெற்ற “15வது Shotokan Karate National Championship 2025” போட்டியில் நிந்தவூர் Team Bruce மாணவர்கள் சாதனை படைத்து 4 தங்கம், 1 வெள்ளி மற்றும் 3 வெண்கலப்பதக்கங்களை வென்று பெருமை சேர்த்துள்ளனர். தேசிய ரீதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்ட இத்தேசியளவிலான போட்டியில் SKMS அமைப்பின் மாணவர்கள் தங்கள் திறமையை நிரூபித்துள்ளனர். இது ஒழுக்கம்,…

Read More

உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்கள் கௌரவிப்பு.

சாதனை படைத்த ரிதிதென்ன இக்ரஹ் வித்தியாலய மாணவர்களுக்கு ஜெயந்தியாய அஹமட் ஹிராஸில் கௌரவிப்பு கடந்த 2025 க.பொ.த உயர்தரப்பரிட்சையில் சித்தியடைந்து வரலாற்றுச்சாதனை நிகழ்த்திய மாணவர்களையும் கற்பித்த ஆசிரியர்களையும் வழிகாட்டிய அதிபரையும் பாராட்டி வரவேற்று கௌரவிப்பு செய்த நிகழ்வானது ஜெயந்தியாய அஹமட் ஹிராஸ் வித்தியாலயத்தில் அதன் முதல்வர் எஸ்.ஐ.முஹாஜிரீன் அவர்களின் தலைமையில் பாடசாலை முன்றலில் இன்று (06) நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம அதிதிகளாக ICST CAMPUS முகாமையாளரும் வாகரைப்பிரதேச சபை உறுப்பினருமான SM தாஹிர், வாகரை பிரதேச சபை…

Read More

நலிவுற்ற மக்களின் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்த அரசாங்கத்தின்  தொடரான நடவடிக்கைகள்  முன்னெடுப்பு.

நெருக்கடிமிக்க சூழலிலும் நலிவுற்ற மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த அரசு தீவிரம் – கந்தசாமி பிரபு எம்பி (எம்.ரீ.எம்.பாரிஸ்) தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சர்வதேச ரீதியில் பிற நாடுகளுடன் வலுவான இராஜதந்திர உறவுகளுடன் செயற்படுவதாகவும் நெருக்கடிமிக்க சூழ்நிலையிலும் சாதாரண நலிவுற்ற மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்கான பல்வேறு வேலைத்திட்டங்கள் அரசாங்கத்தினால் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்தி ஒருங்கினைப்புக்குழுவின் இணைத்தலைவருமான கந்தசாமி பிரபு தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய வீடமைப்பு அதிகார…

Read More

மட்டு செங்கலடி பகுதியில்  யானைகளின்  அட்டகாசத்தால் பொருட்கள் சேதம்.

செங்கலடி பதுளை வீதியில் யானைகளின் அட்டகாசத்தால் வர்த்தக நிலையம் உட்பட பயிர் நிலங்களும் மதில்களும் சேதமாக்கப்பட்டுள்ளன. இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வேளையிலே இச்சம்பவம் பதிவாகியுள்ளது.இச்சம்பவத்தினால் அதிகளவான பெறுமதிமிக்க பொருட்கள் நாசமாகியுள்ளன. யானை அச்சுறுத்தல் மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடரும் வேளை உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தி விரைவாக தீர்வை பெற்றுத்தர வேண்டும் என பொதுமக்கள் இதன்போது கோரிக்கை விடுக்கின்றனர்.

Read More

ஏறாவூர் வாவிக்கரை பூங்காவில் முதியோர் ஓய்வுக்கான கூடாரம் திறந்து வைப்பு.

முதியோர்களுக்கான ஓய்வு வசதிகள் மேம்பாடு – மௌலானா பூங்காவில் கூடாரம் — தவிசாளர் நழீம் அவர்களினால் திறந்து வைப்பு ஏறாவூர் வாவிக்கரை வீதியில் அமைந்துள்ள மௌலானா பூங்காவில், தினமும் மாலை நேரங்களில் முதியோர்கள் ஒன்றுகூடி தங்களது ஓய்வு நேரங்களை மகிழ்ச்சியுடன் கழிப்பது வழக்கமாக இருந்து வந்தது. இந்நிலையில், ஏறாவூர் நகரசபையின் கௌரவ தவிசாளர் அல்ஹாஜ் எம்.எஸ். நழீம் அவர்கள், நகரசபைக்கு சொந்தமான இப்பூங்காவை பார்வையிட வந்தபோது, அங்கு கூடிவந்த முதியோர்களினால் அவர்கள் எதிர்நோக்கும் சிரமங்கள் மற்றும் குறைபாடுகள்…

Read More

சம்மாந்துறை அல்/அர்சத் மகா வித்தியாலயத்திற்கு மின்குமிழ்கள் வழங்கி வைப்பு.

சம்மாந்துறை அல்-அர்சத் மகா வித்தியாலயத்திற்கு நவீன மின்விளக்கு தொகுதிகள் வழங்கல் (நூருல் ஹுதா உமர்) பின்தங்கிய மாணவர்கள் அதிகம் கல்வி பயிலும் சம்மாந்துறை கமு/சது/ அல்-அர்சத் மகா வித்தியாலயத்தின் கல்வி சூழலை மேம்படுத்தும் நோக்கில், ரூபாய் நான்கு இலட்சம் பெறுமதியான நவீன மின்விளக்கு தொகுதிகள் இன்று (02) வழங்கப்பட்டன. இத்தொகுதிகளை சம்மாந்துறை “வன் என் வன்” டிரான்ஸ்போர்ட் சங்கத்தின் பிரதிநிதிகள், சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஐ.எல்.எம். மாஹீர் அவர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தனர். யானை தாக்குதலில் இருந்து…

Read More

முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலியின் வாழ்த்து செய்தி.

நேற்றைய தினம் வெளியிடப்பட்ட க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், அனைத்து துறைகளிலும் சிறப்பான சாதனைகளைப் பெற்ற மாணவ மாணவியர் அனைவருக்கும் எனது இதயப்பூர்வமான பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். மாணவர்களின் கடின உழைப்பின் பலன், அதனுடன் இணைந்து பாடசாலை சமூகத்தின் அர்ப்பணிப்பு, அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் அரிய வழிகாட்டல், குறிப்பாக பெற்றோர்களின் அளவற்ற தியாகம் மற்றும் ஆதரவு ஆகியவற்றின் ஒருங்கிணைந்த வெற்றியை பெருமையுடன் நினைவுகூர்கிறேன். கல்வியின் மூலம் அறிவார்ந்த மற்றும் வலுவான சமூகத்தை உருவாக்க வேண்டும் என்ற…

Read More

காத்தான்குடி மத்திய கல்லூரி மாணவர்கள் உயர்தர பரீட்சையில் சிறந்த பெறுபேறு.

உயர்தரப் பரீட்சையில் வர்த்தகப்பிரிவில் காத்தான்குடி, மத்திய கல்லூரி மாணவன் தேசிய மட்டத்தில் முதலாமிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். நேற்று வெளியாகிய 2025ம் ஆண்டிற்கான கல்வி பொதுத் தராதர உயர்தரப்பரீட்சை பெறுபேறுகளில் காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலையில் கல்வி கற்ற மாணவன் எம்.எஸ்.எம். பர்தான்  தேசிய ரீதியில் வர்த்தக பிரிவில் முதலாம் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார். அத்துடன் மாவட்ட ரீதியில் பொறியியல் தொழிநுட்பத்துறையில்எம்.ஜே. அத்ஹம் முதலாம் இடம் பெற்றதுடன், கலைத் துறையில் எம்.எல்.எம். ஆதில் மட்டக்களப்பு…

Read More

ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளரின் வாழ்த்து செய்தி.

மாணவர்களின் நீண்டகால முயற்சி, அர்ப்பணிப்பு, உறுதியான மனப்பாங்கிற்கு கிடைத்த அங்கீகாரம் பரீட்சைப்பெறுபேறுகள் – வாழ்த்துச்செய்தியில் ஓட்டமாவடி பிரதேச சபைத்தவிசாளர் எம்.எம்.மீராசாஹிப் ஹலால்தீன் மாணவர்களின் நீண்டகால முயற்சி, அர்ப்பணிப்பு மற்றும் உறுதியான மனப்பாங்கிற்கு கிடைத்த அங்கீகாரமாக இப்பரீட்சைப்பெறுபேறுகள் அமைந்துள்ளதாக நேற்றைய தினம் (31) வெளியிடப்பட்ட உயர்தரப்பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் சித்திபெற்ற மாணவர்களுக்கு தெரிவித்த வாழ்த்துச்செய்தியில் ஓட்டமாவடி பிரதேச சபைத்தவிசாளர் எம்.எம்.மீராசாஹிப் ஹலால்தீன் குறிப்பிட்டுள்ளார். இப்பெறுபேறுகள் வெறும் மதிப்பெண்களல்ல. அது பல ஆண்டுகளாகத் தொடர்ந்து செய்யப்பட்ட உழைப்பு, தியாகம் மற்றும்…

Read More
Back To Top